பெரியோர்களே!


நீங்கள் நன்கறிந்த தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் காட்டத் தயாரா? அதனை சுவைத்துச் சிறப்பிக்க நாங்களும் தயார்!!
உங்கள் கைப்பக்குவத்தைக் காட்ட ஒரு அருமையான வாய்ப்பு! இணையுங்கள் எங்களுடன்!!

அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை- புதினம், புதிர், புத்திசை – பொன்னியின் செல்வன் சிறப்பு நிகழ்ச்சியின் போது, பெரியவர்களுக்கான அறுசுவை உணவுப் போட்டி நடைபெறவுள்ளது.

நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள GATS உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினர் அல்லாதவர் $10 கட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து கொள்ளலாம். நீங்கள் GATS உறுப்பினரின் பெற்றோராக இருந்தால், நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

1. ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் வீட்டிலேயே உணவைத் தயாரித்து போட்டி நடைபெறும் இடத்தில் வழங்க வேண்டும்
2. பரிமாறப்படும் உணவு 20 பேருக்கு பரிமாறும் வகையில் சிறிய தட்டு (Small Tray ) அளவில் இருக்க வேண்டும்
3. வழங்கப்பட்ட கருப்பொருள் (தமிழர் பாரம்பரிய உணவு) அடிப்படையில் போட்டியாளர்கள் உணவைத் தயாரிக்க வேண்டும்
4. போட்டியாளர் உணவின் பெயர் மற்றும் பொருட்களை ஒரு காகிதம் /அட்டையில் பட்டியலிட்டு காட்சிக்கு வைக்க வேண்டும்
5. போட்டியில் பங்கேற்பவர்கள் மதியம் 1.10 மணிக்கு முன்னதாக அறையில் இருக்க வேண்டும்.
6. மற்றும் 1.30 மணிக்கு முன் தங்கள் உணவை நடுவர்களுக்கு வழங்க வேண்டும் . பகல் 1.30 முதல் 2 மணி வரை தீர்ப்பு வழங்கப்படும்.
7. சுவை மற்றும் உணவை அழகாக காட்சிப்படுத்துதல் ஆகியவைகளின் அடிப்படையில் மதிபெண்கள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள – contact@gatamilsangam.org

நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள கீழ்கண்ட படிவத்தை நிரப்புங்கள்.